திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள நகர் கிராமத்தை சேர்ந்தவர் ஜான்சன் அவரது மனைவி ஜெயராணி பிரசவத்திற்காக திருச்சி புத்தூர் பகுதியில் அமைந்துள்ள ஜெனட் மருத்துவமனையில் கடந்த 1 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார் இந்நிலையில் கடந்த 3 ஆம் தேதி திங்கள் கிழமை அவருக்கு அறுவை சிகிச்சை மூலமாக ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை ஜெயராணிக்கு வயிற்று வலி இருந்து உள்ளது மேலும் அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்துள்ளனர். ஆனால் வலி அதிகரித்ததன் காரணமாக அவர்கள் கண்டோன்மெண்ட் பகுதியில் உள்ள வேறு ஒரு தனியார் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

அங்கு பரிசோதித்த போது குடலில் ஓட்டை விழுந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக ஜெயராணி உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்து வந்த உறவினர்கள் ஜெயராணியின் மரணத்திற்கு ஜெனட் மருத்துவமனை மருத்துவர்கள் தான் காரணம் எனக்கூறி புத்தூர் பகுதியில் உள்ள மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் அதனை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *