திருப்பரங்குன்றம் தீபத்தூண் மீது கார்த்திகை தீபம் ஏற்ற நீதிமன்றம் தீர்ப்பை மீறி முருக பக்தர்களை அவமதித்த தமிழக அரசை கண்டித்து திருச்சி மரக்கடை எம்ஜிஆர் சிலை அருகே இந்து முன்னணியினர் மற்றும் பாரதிய ஜனதா கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்காக குவிந்தனர். இந்நிலையில் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுத்த காவல்துறையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற இந்து முன்னணியினரை தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

இதில் ஆத்திரம் அடைந்த இந்து முன்னணியினர் சிலர் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் இந்த மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினர் மற்றும் பாஜக மாவட்ட தலைவர் ஒண்டி முத்து உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தால் மரக்கடைப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்