திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் மரக்கடை எம்.ஜி.ஆர் சிலை அருகில் திருச்சி மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து திருச்சி மாநகர மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக கழக அமைப்புச் செயலாளர் முன்னாள் அமைச்சர் மோகன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்தின் போது திருச்சி மாநகராட்சி பகுதிகளில் நிலவி வரும் சுகாதார சீர்கேடுகளைக் கண்டித்தும், அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களை பராமரிக்காமல் அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு கிடப்பில் போட்டிருக்கும் மாநகராட்சி நிர்வாகம் மற்றும் திமுக அரசை கண்டித்தும், பாதாள சாக்கடை திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை விரைந்து செயல்படுத்தவும், உயர்த்தப்பட்டுள்ள பல்வேறு வரிகளை உடனடியாக திரும்பிப் பெற வலியுறுத்தியும் கோஷமிட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் அதிமுக அமைப்பு செயலாளர்கள், ரத்தினவேல், மனோகரன், அம்மா பேரவை மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், மகளிர் அணி செயலாளர் நசீமா பாரிக், மாவட்ட துணை செயலாளர் வனிதா, கஇளைஞர் அணி மாவட்ட இணை செயலாளர் சுரேஷ் குமார் மாவட்ட மகளிர் அணி துணை தலைவி புவனேஸ்வரி பகுதி செயலாளர்கள் அன்பழகன், ரோஜர், ஐடி விங்ஸ் மாவட்ட செயலாளர் வெங்கட் பிரபு, திருச்சி மாநகர் மாவட்ட மாணவரணி துணைத் தலைவர் வழக்கறிஞர் சேது மாதவன் மாவட்ட நிர்வாகிகள், மற்றும் கூட்டணி கட்சியான எஸ்.டி.பி.ஐ , தேமுதிக உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்