Author: JB

பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் திருச்சி மத்திய மாவட்ட தமாகா விவசாய அணி தலைவர் புங்கனூர் செல்வம் மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் வழங்கினார்:-

பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில், திருச்சி மத்திய மாவட்ட தமாகா விவசாய அணி தலைவர் புங்கனூர் செல்வம் தலைமையில் பெருந்தலைவர் காமராஜர் படத்திற்கு மாலை அணிவித்து, கொடியேற்றி, குழந்தைகளுக்கு நோட்டுப் புத்தகம் மற்றும்…

திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த புதிய பேருந்து முனையத்தை முற்றுகையிட்ட ஆட்டோ ஓட்டுனர்களால் பரபரப்பு:-

திருச்சி பஞ்சப்பூரில் மே 9-ந் தேதி தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் முத்தமிழ் அறிஞர் கலைஞர் மு.கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தை திறந்து வைத்தார். மேலும் இந்த ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தில் பேருந்துகள் வந்து செல்வதற்கான அட்டவணை, பேருந்துகளுக்கு இடம் ஒதுக்குவது…

பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி காட்டூர் கோட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது:-

திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் காட்டூர் கோட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் கர்மவீரர் பெருந்தலைவர் காமராஜ் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி காட்டூர் பகுதியில் மாபெரும் பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் இந்திரா தோழி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மாரீஸ்வரி ராமர்…

பள்ளி வளாகங்களை தவறாக பயன் படுத்துபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் – அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரிக்கை:-

திருச்சி தெற்கு மாவட்ட கழகத்தின் சார்பாக ஓரணியில் தமிழ்நாடு என்னும் செயல்பாட்டினை ஒருங்கிணைப்பதற்காக வி. என். நகர் மூன்றாவது குறுக்குத் தெருவில் War room (வார் ரூம்) மாவட்டக் கழகச் செயலாளரும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திறந்து…

கல்வியால் மட்டுமே சமூகத்தில் தலை நிமிர்ந்து நடக்க முடியும் – திருச்சியில் டி.ஐ.ஜி வருண் குமார் பேச்சு:-

திருச்சி கொட்டப்பட்டு பகுதியிலே தனியார் (பாவை) அறக்கட்டளை சார்பில் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற திருச்சி சரக காவல்துறை துணை தலைவர் வருண்குமார் மாணவர்களிடம் பேசுகையில் : கல்வியால் மட்டும் தான் இன்று சமூகத்தில் தலை நிமிர்ந்து நடக்கிறோம்.…

சுதந்திரப் போராட்ட வீரர் அழகு முத்துக்கோன் அவர்களின் 268 வது குருபூஜை விழாவை முன்னிட்டு அவரது படத்திற்கு தமிழ்நாடு யாதவ மகா சபை சார்பில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்:-

தமிழ்நாடு யாதவ மகா சபை சார்பில் இந்தியாவின் முதல் சுதந்திர போராட்ட வீரர் மாவீரன் அழகுமுத்துக்கோன் அவர்களின் 268 வது குருபூஜை விழா திருச்சி பழைய பால்பண்ணை புதிய வெங்காய மண்டி வணிக வளாகத்தில் இன்று நடைபெற்றது இவ்விழாவிற்கு திருச்சி வெங்காய…

ஜூலை 16ம் தேதி பஞ்சப்பூர் பேருந்து நிலையம் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் – அமைச்சர் கே.என்.நேரு தகவல்:-

தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அந்த பேட்டியில் கூறியதாவது:- தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் கடந்த மே மாதம் 9-ம் தேதி திருச்சி பஞ்சபூர் பகுதியில் திறக்கப்பட்ட முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி பேருந்து முனையம்…

புரட்சித் தலைவி அம்மா பேரவை மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் ஏற்பாட்டில் அதிமுக அரசின் சாதனைகள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது:-

திருச்சி மாநகர் மாவட்டம், கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சிங்காரதோப்பு பகுதியில், புரட்சித் தலைவி அம்மா பேரவை மாவட்ட செயலாளரும், முன்னாள் ஆவின் தலைவருமான பொறியாளர் கார்த்திகேயன் ஏற்பாட்டில், மாவட்ட செயலாளரும்சீனிவாசன் தி.மு.க அரசின் அவலங்களை எடுத்துக் கூறி, அனைத்திந்திய அண்ணா…

10-அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 17, 18-ம் தேதிகளில் மறியல் போராட்டம் -தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு அறிவிப்பு:-

தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு மாநில கூட்டம் திருச்சி அருண் ஹோட்டலில் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஒருங்கிணைப்பாளர் மயில் கூறுகையில்:- பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்ற வேண்டும், இது தொடர்பாக…

திருச்சியில் “டர்ஃப் 1 ஜீரோ” புதிய விளையாட்டு மைதானத்தை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்:-

திருச்சி வயலூர் ரோடு சீனிவாச நகர் பகுதியில் “டர்ஃப் 1 ஜீரோ” என்ற புதிய விளையாட்டு மைதானம் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மைதானத்தை திறந்து வைத்து பார்வையிட்டார்.…

சுதந்திர போராட்ட மாவீரர் அழகு முத்துக் கோனின் வீர வரலாற்றினை பாடப் புத்தகத்தில் சேர்க்க பாரத முன்னேற்றக் கழக தலைவர் பாரதிராஜா யாதவ் வலியுறுத்தல்:-

பாரத முன்னேற்றக் கழகம் சார்பில் திருச்சியில் முதல் சுதந்திர போராட்ட மாவீரர் அழகுமுத்துக்கோன் ஜெயந்தி விழா தலைவர் பாரத ராஜா யாதவ் தலைமையில் நடைபெற்றது. பா.மு.க. அமைப்புச் செயலாளர்கள் இராமச்சந்திரன், கீரனூர் செல்வம், தமிழ் மாநில யாதவ மகாசபை ஒருங்கிணைப்பாளர் திருவேங்கடம்…

திமுக அரசை கண்டித்து 2013 ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நல சங்கம் சார்பில் டார்ச் லைட் அடித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்:-

திருவாரூர் மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் முன்பாக திமுக அரசை கண்டித்து 2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நல சங்கம் சார்பில் திமுக அரசு கண்டித்து டார்ச் லைட் அடித்து நூதன போராட்டத்தை இன்று நடத்தினர். இந்த…

கூத்தூர் ரயில்வே மேம்பாலம் அடியில் 40 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் ரயிலில் அடிபட்டு பலி:-

திருச்சி ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்திற்கும் வாளாடி ரயில் நிலையத்திற்கும் இடையே கூத்தூர் ரயில்வே மேம்பாலத்தில் அடியில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் அவ்வழியே வந்த ஏதோ ஒரு ரயில் வண்டியில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உடல் சிதறி இறந்துள்ளார்.…

திருச்சி அரசு கலைக் கல்லூரியில் வழங்கப்பட்ட மாற்றுச் சான்றிதழில் உள்ள குளறுபடியை நீக்கக்கோரி இந்திய மாணவர் சங்கம் சார்பில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் கல்லூரி கல்வி இணை இயக்குனரிடம் மனு அளித்தனர்:-

இந்திய மாணவர் சங்கத்தை சேர்ந்த மாணவர் தலைவர்கள் வைரவளவன் மற்றும் ஆமோஸ் ஆகியோர் தலைமையில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் மாற்றுச் சான்றிதழை மாற்றித் தரும்படி திருச்சி காஜாமலை பகுதியில் அமைந்துள்ள கல்லூரி கல்வி இணை இயக்குநர் அலுவலகம் கல்லூரி இணை இயக்குனர் முனைவர்.…

அமைச்சர் கே.என்.நேரு தொகுதியில் உள்ள அரசு மருத்துவ மனையின் அவலநிலையை கண்டித்து CPI(M) சார்பில் 13-ம் தேதி கையெழுத்து இயக்கம் அறிவிப்பு:-

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி மாநகர் மாவட்டக்குழு சார்பில் அண்ணல் மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையின் நிலை குறித்து நேரடி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வறிக்கை சம்பந்தமான பத்திரிகையாளர் இன்று திருச்சி வெண்மணி இல்லத்தில் நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்…

தற்போதைய செய்திகள்