அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் 71-வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி தெப்பக்குளம் மலைக்கோட்டை மாணிக்க விநாயகர் கோவிலில் அதிமுக மலைக்கோட்டை பகுதி செயலாளர் அன்பழகன் ஏற்பாட்டில்

மாணிக்க விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அமைப்பு செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ரத்தினவேல், அம்மா பேரவை மாநில துணைச் செயலாளர் அரவிந்தன், மாவட்ட செயலாளர் சீனிவாசன் மற்றும் அம்மா பேரவை மாநகர மாவட்ட செயலாளரும், முன்னாள் ஆவின் சேர்மன் கார்த்திகேயன் ஆகியோர் சிறப்பு பூஜையில் பங்கேற்றனர்

அதனைத் தொடர்ந்து கோவில் வளாகத்தில் பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் மாநகர் மாவட்ட நிர்வாகிகள் உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்