அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொது செயலாளர் டிடிவி தினகரன் ஆணைக்கிணங்க, திருச்சி தெற்கு மாவட்டம் மணப்பாறை *வையம்பட்டி வடக்கு* மற்றும் *தெற்கு* ஒன்றிய கழகத்தின் சார்பில், வையம்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் முகமது அப்துல்லா, வையம்பட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் வெள்ளைச்சாமி, ஆகியோர் ஏற்பாட்டில்
வையம்பட்டி பேருந்து நிறுத்தத்தில் அமைக்கப்பட்ட கோடைகால நீர் மோர் பந்தலை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு, திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும் , முன்னாள் கவுன்சிலருமான செந்தில்நாதன் திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர் மோர் மற்றும் தர்பூசணி வழங்கினார்.
இந்த நிகழ்வில் மாவட்டத் துணைச் செயலாளர் தன்சிங், பொதுக்குழு உறுப்பினர் வேதராஜன், பொறியாளர் பிரகாஷ், நல்லுசாமி,கல்நாயக் சதீஷ்குமார், மதியழகன், நாகநாதர் சிவகுமார், கல்லணை குணா, தருண், மலைக்கோட்டை சங்கர், கருணாநிதி, முகமது ஹாரிஸ், லோக்நாத் லோகு, விஜய் பிரகாஷ், வையம்பட்டி வடிவேல், மாரிமுத்து, ராமலிங்கம், தனபாக்கியம், குமாரவாடி பாலு, வையம்பட்டி சின்ன காளை, மாயழகன், நிர்வாகிகள் தொண்டர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.