திருச்சி சேவா சங்கம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 60வது ஆண்டு விளையாட்டு விழா இன்று நடைபெற்றது. இவ்விழாவில் திருச்சி கோட்டம் தெற்கு ரயில்வே துறை பிரிவு மேலாளர் .அன்பழகன், திருச்சி மங்கள் & மங்கள் உரிமையாளர் மூக்கப்பிள்ளை கலந்துகொண்டு மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார். விழாவில் திருச்சி சேவா சங்க நிர்வாகிகளான தலைவர் சகுந்தலா சீனிவாசன், , செயலர் சரஸ்வதி,உபத் தலைவர் கமலா பண்டாரி, பொருளாளர் லெட்சுமி சுப்ரமணியன், பள்ளிகளின் செயலர் கீதா கௌரி, , இணைச் செயலர் சீதா லெட்சுமி, மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

இவ்விழாவில் பள்ளியின் தலைமையாசிரியை நாகம்மை அனைவரையும் வரவேற்றார். அன்பழகன் கொடியேற்றி, விளையாட்டு விழா அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு, விழாவில், போட்டிகள் நடத்தப்பட்டது. போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 6 முதல் 12ஆம் வகுப்பு மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும், சிலம்பம் மற்றும் ஜிம்னாஸ்டிக் போன்ற விளையாட்டுகளும் மாணவிகள் செய்து காட்டினர்.. பள்ளிகளின் செயலர் கீதா கௌரி நன்றியுரை வழங்கினார். இந்த விளையாட்டு விழாவில் பள்ளி மாணவிகள் பெற்றோர் உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்