திருச்சி பொன்மலை ஆர்மரிகேட் அருகே உள்ள அருள்மிகு ஸ்ரீ பாலமுருகன் திருக்கோவிலின் ஜீர்ணோத்தாரண அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது. முன்னதாக திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவேரி ஆறு படித்துறையில் இருந்து புனித நீர் பக்தர்களால் கொண்டுவரப்பட்டு

அருள்மிகு ஸ்ரீ பாலமுருகன் திருக்கோவில் முன்பு அமைக்கப்பட்டு இருந்த யாக சாலையில் வைத்து புனித நீருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள்ளாக கோவில் கலசத்தில் சிறப்பு பூஜை செய்து புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

 மேலும் இந்த மகா கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. இந்த விழாவில் திருச்சி பொன்மலை கோட்டம் பொறுப்பாளரும் எஸ் ஆர் எம் யு துணைப் பொதுச் செயலாளருமான வீரசேகரன், பொன்மலை மத்திய பணிமனை முதன்மை பணிமனை மேலாளர் சந்தோஷ் குமார் பட்ரோ ஆகியோர் பங்கேற்றனர்.

மேலும் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் பொதுமக்களுக்கு ஓபிஎஸ் அசோசியேஷன் கோட்டத் தலைவர் கோபிநாத் ஏற்பாட்டில் மாபெரும் அன்னதான விழா நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்