திருச்சி கே.கே நகர் இந்திரா காந்தி தெருவை சேர்ந்தவர் சீனிவாசன். இவர் கேகே நகரில் தனது பெயரில் பேட்மிட்டன் அரங்கம் கட்டுவதற்கு மும்முனை மின்சாரம் வேண்டி விண்ணப்பித்தார். தன் பெயரில் மின் இணைப்பு பெற கே.கே நகர் உதவி செயற்பொறியாளர் சந்திரசேகர் (வயது 58) என்பவரை அணுகி விவரத்தை கேட்டார். அப்போது சந்திரசேகர் மின் இணைப்பு கொடுக்க ரூ 10 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். அதன் தொடர்ச்சியாக இன்று சீனிவாசன் லஞ்ச ஒழிப்பு துறை போலீசில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு துணை கண்காணிப்பாளர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு மணிகண்டன் மற்றும் அலுவலர்கள் உதவி செயற்பொறியாளர் சந்திரசேகரை பொறி வைத்து பிடிக்க திட்டமிட்டனர்.

அதன்படி இன்று மதியம் லஞ்சப் பணம் ரூபாய் 10 ஆயிரத்தை சீனிவாசன்யிடம் கொடுத்து அதனை சந்திரசேகரிடம் கொடுக்க சொன்னார்கள். இதையடுத்து இன்று மின்வாரிய அலுவலகத்தில் சீனிவாசன் பணத்தை உதவி செய்பொறியாளர் சந்திரசேகரிடம் கொடுத்தார். இதையடுத்து அந்த பணத்தை தனது தனிப்பட்ட உதவியாளர் கிருஷ்ணமூர்த்தி (வயது 34) என்பவரிடம் கொடுத்து அவர் வைத்திருந்த போது கையும் களவுமாக இருவரும் பிடிபட்டனர். இதையடுத்து இருவரையும் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கே.கே நகர் மின்சார வாரிய அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தினர் தொடர்ந்து அவர்கள் இருவரையும் போலீசார் விசாரணைக்காக லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்திற்கு அழைத்து சென்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்