தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்களின் கூட்டு நடவடிக்கை குழுவின் கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தலைவர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் 234 அரசாணையை முழுமையாக ரத்து செய்ய வேண்டும், இடைநிலை ஆசிரியருக்கான ஊதியத்தில் ஏற்பட்டுள்ள குறைபாடுகள் அனைத்தையும் மாற்றி அமைத்து நடுவன் அரசுக்கு இணையாக தமிழக அரசு ஊதியம் வழங்க வேண்டும், 42அரசாணை பின்பற்றி ஊக்க ஊதிய உயர்வு தொடர்ந்து வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது இந்த கூட்டத்தில் பொதுச் செயலாளர்கள் ராஜேந்திரன், வின்சென்ட் பால்ராஜ், இரா.தாஸ், சேகர், இலா .தியோட ராபின்சன், சண்முகநாதன், முத்துராமசாமி, மாநில தலைவர் ரக்ஷிதா, உட்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து செய்தியாளருக்கு பேட்டி அளித்த தலைவர் ராஜேந்திரன் கூறுகையில் :- தமிழக அரசு 243 என்ற அரசானையை பிறப்பித்து தொடக்ககல்வியில் பணிபுரியும் 90சதவீத ஆசிரியர்களுக்கு மனவேதனை உண்டாக்கியுள்ளது. எனவே, அந்த அரசாணை ரத்து செய்ய வேண்டும், இது தொடர்பாக சென்னையில் ஆர்ப்பாட்டம் செய்யும் பொழுது பள்ளிக்கல்வித்துறை செயலாளர் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி 30நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். வரும் 31ஆம் தேதிக்குள் இந்த கோரிக்கை நிறைவேற்றாவிட்டால் செப்டம்பர் மாதம் 1ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் அடையாள வேலை நிறுத்தத்தின் ஆயத்த கூட்டம் நடைபெறும், இதைத் தொடர்ந்து 10ஆம் தேதி அடையாள வேலை நிறுத்தம் நடைபெறும், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு அன்று ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம். எனவே, உடனடியாக பள்ளிக்கல்வித்துறை இயக்குனரோ அல்லது அமைச்சர் அழைத்துப் பேச வேண்டும் இல்லையென்றால் அடுத்த கட்ட போராட்டத்திற்கு இந்த அமைப்பு தள்ளப்படும். வரும் 29, 30 மற்றும் செப்டம்பர் ஒரு மாதம் 1ம் தேதியில் சென்னையில் கோட்டை நோக்கி முற்றுகை போராட்டம் நடத்த திட்டமிட்டு உள்ளோம். எனவே அரசு உடனடியாக எங்களை அழைத்துப் பேச வேண்டும் என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்