கடந்த 24 ஆண்டுகளாக திருச்சி மாவட்டத்தில் ஜெயா டிவி, நியூஸ் J உள்ளிட்ட தொலைக்காட்சிகளில் மண்டல நிருபராக பணியாற்றிய மூத்த பத்திரிகையாளர் *அ. ஸ்டீபன்* அவர்கள் கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பாக கேரளாவில் உள்ள அவரது பாட்டியை பார்ப்பதற்காக மனைவி மற்றும் மகளுடன் சென்றிருந்தார்.

 இந்நிலையில் நேற்று 15-ம் தேதி நள்ளிரவு மாரடைப்பு ஏற்பட்டு திருவனந்தபுரம் பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று இரவு 10 மணி அளவில் இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும் அவரது உடல் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அஞ்சலிக்காக திருச்சி குண்டூர் எம்ஐடி கல்லூரி அருகே உள்ள அவரது தாயார் வீட்டில் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. மேலும் அவரது நல்லடக்கம் நாளை 18ஆம் தேதி காலை 11 மணி அளவில் திருச்சி வேர் ஹவுஸ் பகுதியில் உள்ள கல்லறையில் நல்லடக்கம் செய்யப்படும் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *