தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக கடந்த பல மாதங்களாக, அரசு போக்குவரத்துக் கழகத்தின் ஏசி பஸ்கள் இயக்கப்படாமல் இருந்து.

இதன் காரணமாக அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு தினமும் ரூ.75 லட்சம் முதல் ரூ.1.25 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், கொரோனா நோய் தொற்று பரவல் குறைந்து வருவதை அடுத்து, மீண்டும் ஏசி பஸ் சேவையை தொடங்க அரசு முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் இயக்கப்படாமல் இருக்கும் சுமார் 702 ஏசி பஸ்கள் வரும் அக்டோபர் மாதம் 1ம் தேதி முதல் இயக்கப்படும் என தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

அதன்மூலம் குளிர் சாதன பஸ் சேவைகள் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளைகளையும், சமூக இடைவெளியையும் முழுமையாக பின்பற்றி இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனையில் உள்ள ஏசி பஸ்கள் கிருமிநாசினி தெளிக்கும் பணி இன்று நடந்தது.

மேலும் ஏசி பஸ்ஸில் பயணம் செய்யும் பயணிகள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என்றும், சானிடைசர் மூலம் கைகளை சுத்தம் செய்த பிறகே பஸ்ஸில் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *