திருச்சி மாவட்ட புதிய ஆட்சியராக சிவராசு ஐஏஎஸ் அவர்கள் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் தற்போது திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை இறப்பு விகிதத்தை குறைப்பது தான் முதல் பணியாக நாங்கள் கையில் எடுத்துள்ளோம் மேலும் தினமும் 6 ஆயிரம் பேருக்கு நோய் தொற்று பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது அதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெறும் இந்த பரிசோதனையின் மூலம் 24 மணி நேரத்தில் நோயாளியை கண்டறிந்து அவர்களை உடனடியாக பாதுகாத்து உரிய சிகிச்சை அவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மேலும் தடுப்பூசிகள் எண்ணிக்கை விரைவில் அதிகப்படுத்தப்படும் என்றும் கூறினார்.இவை எல்லாவற்றையும் விட மிக முக்கியமான நோய்த்தடுப்பு என்றால் முகக்கவசம் தனிநபர் இடைவெளியில் தான் எனவே பொது மக்களும் இந்த விழிப்புணர்வோடு முகக் கவசங்கள் அணிந்து தனிநபர் இடைவெளியோடு இருந்தால் நோய் தொற்றை தடுக்கலாம் என்று தெரிவித்தார்.மேலும் குறைவான நோய்த்தொற்று பாதிக்கப்பட்ட நோயாளிகள் தனியார் மருத்துவமனைகளுக்கு செல்லும் போது அவர்களுக்கான படுக்கை வசதி இல்லை என்று கூறுவதும் கடைசி நேரத்தில் இறக்கும் தருவாயில் அவர்களை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பதும், அதிகக் கட்டணம் வசூலிப்பதும் தொடர்பான புகார்கள் வருகிறது. இப்படிப்பட்ட புகார்கள் வந்தால் குறிப்பிட்ட அந்த தனியார் மருத்துவமனை மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *