திருச்சி மாவட்டம் சமயபுரம் பேரூராட்சி 15 வார்டு பகுதிகளில் குடிதண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். அதேபோல் சமயபுரம் சுற்றியுள்ள பகுதிகளுக்கு கடந்த ஒரு வார காலமாக குடிதண்ணீர் வராமல் பொது மக்கள் தவித்து வரும் நிலையில் இதுகுறித்து சமயபுரம் பேரூராட்சி அதிகாரிகளிடம் தொலைபேசியில் பொதுமக்கள் புகார் அளித்த போது அதிகாரிகள் அலட்சியமாக பதில் கூறுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதனையடுத்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஒன்றுகூடி நேராக பேரூராட்சி அலுவலகத்தில் சென்று காவேரி குடிதண்ணீர் ஒரு வார காலமாக வராதது ஏன் என அதிகாரிகளிடம் கேட்டதற்க்கு அதிகாரிகள் பலூர் அருகே காவிரி தண்ணீர் வரக்கூடிய குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் அதனை சரி செய்த பிறகு தான் தண்ணீர் முறையாக அனைவருக்கும் வினியோகம் செய்ய முடியுமென அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் இன்று மாலை அவரவர் வீட்டின் அருகாமையில் லாரிகள் மூலம் குடிதண்ணீர் வழங்குவதாகும், கட்டாயம் பொதுமக்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என பேரூராட்சி நிர்வாகம் சார்பாக பொதுமக்களிடம் தெரிவித்து சமதானம் செய்தனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *