திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் சுற்றுலாத்துறை அமைச்சருமான வெல்லமண்டி நடராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- 

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளாராகவும், தமிழ்நாடு முதலமைச்சாராகவும், தனது வாழ்நாளை மக்களுக்காகவே அர்ப்பணித்து தவ வாழ்வு வாழ்ந்து மறைந்த “மக்கள் தலைவி” இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 74-வது பிறந்த நாளை முன்னிட்டு வருகிற 24.02.2022 வியாழக்கிழமை காலை 10.30 மணி அளவில் திருச்சி, தென்னூர், அதிமுக மாநகர் மாவட்ட அலுவலகத்தில் மறைந்த மாண்புமிகு அம்மாவின் திருஉருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படவுள்ளது. அதுசமயம் நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்எல்ஏக்கள், முன்னாள் மாவட்ட செயலாளர்கள். முன்னாள் மாவட்ட நிர்வாகிகள், மாவட்ட , பகுதி , வட்ட செயலாளர்கள், நிர்வாகிகள், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், எம்.ஜி.ஆர். மன்றம், மாண்புமிகு அம்மா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்க பேரவை. வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப்பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, இலக்கிய அணி, மருத்துவ அணி, அமைப்பு சாரா ஓட்டுநர் அணி, இளைஞர் பாசறை மற்றும் இளம்பெண்கள் பாசறையை சேர்ந்தவர்கள், தகவல் தொழில்நுட்ப பிரிவினை சேர்ந்தவர்கள், வர்த்தக அணி, கலை பிரிவு, Ex.கோட்டத் தலைவர்கள், Ex.உள்ளாட்சி தலைவர்கள், பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க தலைவர்கள், இயக்குநர்கள், தலைமை கழக பேச்சாளர்கள், செயல்வீரர்கள். வீராங்கனைகள் அனைவரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *