அஇஅதிமுக திருச்சி மாநகர் மாவட்ட மகளிர் அணிச் செயலாளரும் மாநில செயற்குழு உறுப்பினருமான டாக்டர். தமிழரசி சுப்பையா நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சரும், கழக முதன்மை செயலாளருமான கே.என். நேரு முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

 முன்னதாக அதிமுகவில் இருந்து டாக்டர் சுப்பையா பாண்டியன் வெளியேறி சென்னையில் திமுக முதன்மைச் செயலாளரும், அமைச்சருமான கே என் நேரு முன்னிலையில் திமுகவில் இணைந்தார். அதனை தொடர்ந்து அவரது மனைவியும் திருச்சி மாநகர் மாவட்ட மகளிரணி தலைவியுமான தமிழரசி சுப்பையா திருச்சி தில்லைநகரில் உள்ள நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே என் நேரு அலுவலகத்தில் நேரில் சந்தித்து தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார்.

கடந்த முறை மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் திருச்சி கிழக்கு தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பின் உட்கட்சி பூசல் காரணமாக அதிரடியாக மாற்றப்பட்டார்.
முன்னதாக திருச்சி அதிமுக மகளிர் அணியை துடிப்புடனும், வலிமையுடனும் வழிநடத்திச் சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதிமுகவில் இருந்து டாக்டர் தமிழரசி சுப்பையா விலகியிருப்பது. வரும் உள்ளாட்சித் தேர்தலில் திருச்சி மாவட்ட அதிமுகவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று அதிமுகாவின் மூத்த நிர்வாகிகள் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *