திருச்சி தாப்பேட்டை பேரூராட்சியில் அதிமுக வேட்பாளர் மனு நிராகரிக்கப்பட்டதால் திமுக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

திருச்சி மாவட்டம் தாப்பேட்டை பேரூராட்சியில் 15 வார்டுகளுக்கு போட்டியிட 50 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர் நேற்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது 8வது வார்டில் திமுக சார்பில் கருணாநிதியும் அதிமுக சார்பில் இளங்கோ என்பவரும் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர் அதிமுக வேட்பாளர் இளங்கோ உறுதிமொழி படிவத்தை இணைக்காததால் அவர் மனு தள்ளுபடி செய்யப்பட்டது இதன் காரணமாக 8வது வார்டில் திமுக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார் அதிகாரபூர்வமாக இவர் வெற்றி பெற்றது வாக்கு எண்ணும் தினத்தன்று அறிவிக்கப்படும் என தேர்தல் நடத்தும் அலுவலர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *