நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சரும் தி.மு.க முதன்மை செயலாளருமான கே.என் நேருவின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு கட்சி நிர்வாகிகள் சார்பில் திருச்சி மாவட்டம், கல்லணை சாலையில் மாபெரும் குதிரை பந்தயம் நடைபெற்றது. குதிரை பந்தயமானது தங்கையன் கோவில் அருகே துவங்கி திருவளர்ச்சோலை வழியாக உத்தமர்சீலி வரை சென்று மீண்டும் குதிரை பந்தயம் துவங்கிய தங்கையன் கோவிலில் முடிவடைந்தது.

பெரிய குதிரை 10 மைல் தூரம், கரிச்சான் குதிரை 8 மைல் தூரம் மற்றும் புதிய குதிரை 6 மைல் தூரம் என கணக்கிடப்பட்டு மூன்று விதமான குதிரை பந்தயம் நடைபெற்றது. பந்தயத்தில் திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான குதிரைகள் பங்கேற்று ஓடியது. இதில் வெற்றிபெற்ற குதிரைகளுக்கு ரொக்க பரிசு வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *