திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று தமிழக முதல்வர் அவர்களின் ஆணையின்படி தொழிலாளர் நலத்துறையின் சார்பில் அமைப்புசாரா தொழிலாளர் நலவாரிய உறுப்பினர்கள் 2202பேருக்கு 34 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து தொழிலாளர்களுக்குதடுப்பூசி போடும் முகாமினையும் தொடங்கி வைத்தனர். இந்நிழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் சிவராசு, சட்டமன்ற உறுப்பினர்கள் இனிகோ இருதயராஜ், சௌந்தரபாண்டியன், ஸ்டாலின் குமார்,காடுவெட்டி தியாகராஜன், பழனியாண்டி, கதிரவன், அப்துல் சமது ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *