தமிழ்நாடு பறையர்கள் ஒருங்கிணைப்புக் குழு சார்பாக இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் நினைவு நாளையொட்டி இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் திருஉருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். அதனை தொடர்ந்து சட்ட சபையில் அயோத்திதாச பண்டிதருக்கு மணி மண்டபம் அமைத்தல்,

இரட்டைமலை சீனிவாசன் அவர்களுக்கு திண்டிவனத்தில் திரு உருவ சிலை அமைத்தல் மற்றும் நீட் தேர்வு காரணமாக உயிர்நீத்த அனிதாவின் பெயரில் அரியலூரில் மருத்துவக் கல்லூரி அமைக்க அரசாணை வெளியிட்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு பறையர்கள் ஒருங்கிணைப்புக்குழு திருச்சி ஒருங்கிணைப்பாளர் மனோஜ், திருச்சி மாவட்ட பொறுப்பாளர்கள் ரமேஷ், சுகுமார்,சண்முகம், திண்டுக்கல் சேகர், என்ஜினியர் ரமேஷ் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பலர் கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *