திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து அரசு நகரப் பேருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு ஆமூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. அதேபோல் திருச்சியிலிருந்து சேலம் நோக்கி கண்டெய்னர் லாரி வந்து கொண்டிருந்தது.அப்போது சிலையாத்தி பகுதியில் கண்டெய்னர் லாரி அரசுப் பேருந்தை முந்தி சென்றது.

இந்நிலையில் சாலையோரம் இருந்த 100 வருட பழமையான அரசமரம் மீது கண்டெய்னர் லாரி உரசிச் சென்றதில் மரத்தின் கிளை முறிந்து அரசு பேருந்து மீது விழுந்தது. இதில் பேருந்தில் இருந்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக யாரும் காயமின்றி உயிர்த் தப்பினர்.

இது குறித்து தகவல் அறிந்த வாத்தலை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உள்ளூர் நபர்களின் உதவியுடன் மரத்தை அகற்றும் பணியில் ஈடுப்பட்டனர். இதனால் திருச்சி சேலம் நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *