தமிழகம் முழுவதும் கொரோனா நோய்த் தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன நிலையில்,
திருச்சியில் நாளுக்கு நாள் இறப்பு விகிதம் அதிகரித்து வருவதால் நோய்த்தொற்றால் பாதிக்கபடுவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது.

இந்நிலையில் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே என் நேரு அவர்கள் அரசு மருத்துவமனையில் தற்போது இருக்கக்கூடிய ஆக்சிசன் அளவு மற்றும் படுக்கைகளின் எண்ணிக்கை நோயாளிகளின் சிகிச்சைமுறை நோயாளிகளின் எண்ணிக்கை என பல்வேறு தகவல்களை திருச்சி தலைமை அரசு மருத்துவமனை தலைவர் மருத்துவர் வனிதாவிடம் நேரில் விசாரணை செய்து உள்ளார்.

உடனடித் தேவை எது என்பதை ஆராய்ந்து தகவல் கொடுக்குமாறு அதனை சரிசெய்வதற்கான நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

834 நான்கு பேர் உள்நோயாளிகளாக தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர் மேலும் கலையரங்கம் மண்டபத்தில் ஆக்சிஜன் வசதியோடு கூடிய படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்படும். மேலும் 44 சாதாரண படுக்கைகள் காலியாக உள்ளது.

மேலும் அரசு மருத்துவமனையில் கூடுதலாக 100 இடங்கள் ஏற்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

திருச்சி மாவட்டத்தில் அரசு மருத்துவமனை மட்டுமின்றி தனியார் மருத்துவமனைகளுக்கும் தேவையான ஆக்சிஜன் வசதி செய்து தரப்படும் என்றும், தற்போதைக்கு ஆக்சிஜனக்கு எந்தவித தட்டுபாடும் ஏற்படவில்லை.
இந்த ஆய்வில் திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு, மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன், சட்டமன்ற உறுப்பினர்கள் ஸ்டாலின் குமார், சௌந்திரபாண்டியன், இனிகோ இருதயராஜ், மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, மாநகர செயலாளர் அன்பழகன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *