திருச்சி மண்ணச்சநல்லூர் பகுதியில் அரசு மருத்துவமனை உள்ளது இந்த மருத்துவமனையில் தினமும் இப்பகுதியை சுற்றியுள்ள ஆயிரக்கணக்கான நோயாளிகள் வந்து பரிசோதனை மற்றும் சிகிச்சை மேற்கொண்டு செல்கின்றனர்.

இந்நிலையில் இன்று காலை மண்ணச்சநல்லூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த நோயாளிகள் வளாகத்தில் உள்ள அறுவை சிகிச்சை பிரிவு அறையில் இருந்து இன்று காலை துர்நாற்றம் வீசியது. இது குறித்து சிகிச்சைக்காக வந்திருந்த நோயாளிகள் மருத்துவரிடம் தெரிவித்தனர்.

உடனடியாக மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது. அழுகிய நிலையில் பெண் ஒருவர் சடலமாக இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக இதுகுறித்து மன்னச்சநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். காரின் அடிப்படையில் அரசு மருத்துவமனைக்கு வந்த காவல்துறையினர் அழுகிய நிலையில் இறந்து கிடந்த பெண் யார் என்றும், இவரை யாரேனும் கொலை செய்துவிட்டு இங்கு வந்து உடலை விட்டு விட்டு சென்றனரா? என்பது குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். அழுகிய நிலையில் இறந்து கிடந்த பெண் சடலத்தால் மண்ணச்சநல்லூர் அரசு மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *