3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய கோரி டெல்லியிலே கடந்த 6 மாதங்களாக (180 நாட்கள் ) நடுரோட்டில் உட்கார்ந்து போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், கொரோனா நோயினால் விவசாயிகள் ஒருபுறம் செத்து கொண்டிருக்கின்றனர். மேலும் இந்த போராட்டத்தின் மூலமாகவும் விவசாயிகள் சாவதற்கு வழி செய்து விடாமல் 3 வேளாண் சட்டங்களையும் வாபஸ் வாங்குங்கள் என்று பிரதமர் மோடிக்கு கோரிக்கை வைத்து.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய மறுக்கும் மத்திய அரசின் நிலைப்பாட்டை எதிர்த்து கருப்பு கொடி ஏந்தி அரை நிர்வாணத்துடன் கரூர் பைபாஸ் சாலையை மறித்து இன்று காலை விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் திருச்சி மாவட்ட தலைவர் மேகராஜன், மாவட்ட செயலாளர் சிவகுமார், மாநில இணை ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் சிதம்பரம், மற்றும் நிர்வாகிகள் செல்வம், சதாசிவம், குணசேகரன், லோகேஸ்வரன் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *