ஆசிரியர் பயிற்சி பட்டய படிப்பு படித்து வரும் மாணவர்களுக்கு தொடக்கக்கல்வி பட்டய தேர்வை தமிழகம் முழுவதும் 7 ஆயிரம் முதல் 12000 மாணவர்கள் எழுதுகின்றனர்.

இந்த நேரடி தேர்வில் விடைத்தாள் திருத்தும் நடைமுறையில் குளறுபடிகள் இருப்பதாகவும், கொரோனா காலத்தில் நேரடி வகுப்புகள் தொடங்க கால அவகாசம் வழங்கி தேர்வை ஆன்லைனில் நடத்த வேண்டும் எனவும் கோரிக்கைகளை வலியுறுத்தி

திருச்சி ஹோலி கிராஸ் கல்லூரி முன்பு ஆசிரியர் பயிற்சி பட்டய படிப்பு படித்து வரும் மாணவிகள் 2வது நாளாக இன்று கருப்பு பேட்ஜ் அணிந்து வாசலில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *