ஆடு வளர்ப்பதில் பல நூற்றாண்டுகளாக அனுபவமுள்ள குறும்பர் இனத்தை சேர்ந்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு ஏற்படுத்தும் ஆடு நலவாரியத்தில் வாய்ப்பு அளிக்க வேண்டி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயில் முன்பு மக்கள் சமூக நீதிப் பேரவை துரைசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது…
தமிழகத்தில் குரும்பர் இன மக்கள் பல பிரிவுகளாக இருக்கின்றனர், இவர்கள் குறும்பாடு வளர்ப்பதை முக்கிய தொழிலாக கொண்டுள்ளனர். ஆடு நலவாரியத்தில் குறும்பர் இனத்தை சேர்ந்தவர்களுக்கு தலைவர் பதவி கிடைப்பதில்லை வேறு சமுதாயத்தினருக்கே நல வாரியத்தில் தலைவர் பதவிகள் கிடைக்கிறது. 22 மாவட்டத்தில் மொத்தம் 40 லட்சம் குரும்பர் இன மக்கள் இருக்கின்றனர். தொடர்ந்து எங்கள் சமுதாயத்திற்கு இருட்டடிப்பு நடந்து வருகிறது. எனவே ஆடு நலவாரியத்தில் குறும்பர் இனத்தை சேர்ந்தவர்களுக்கு தலைவர் பதவி வழங்க வேண்டும் என குறும்பாடு உடன் வந்து நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்..