திருச்சி ஒத்தக்கடை பகுதியை சேர்ந்தவர் ஒத்தக்கடை செந்தில் இவர் முன்னாள் அதிமுக நிர்வாகி ஆவார் இவர் தற்பொழுது சசிகலா ஆதரவாளராக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் இவர் திருச்சி ரயில்வே ஜங்ஷன் எதிரே உள்ள வழிவிடு வேல்முருகன் கோவிலில் எடப்பாடிக்கு நல்ல புத்தி கொடுக்க வேண்டியும், அதிமுக ஒன்றிணைந்து வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதியையும் அதிமுக பெற வேண்டும் என வேண்டி சிறப்பு பிரார்த்தனை நடத்தினார்.

குறிப்பாக சசிகலா அவர்கள் பெங்களூர் சிறையில் உடல்நலக் குறைவு ஏற்பட்டபோது அவர் பூரண நலம் பெற்று உடல் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டி இதே வழி விடு முருகன் கோவிலில் மண் சோறு சாப்பிட்டு நேர்த்திக்கடன் செய்தவர் ஒத்தக்கடை செந்தில் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்ந்து செய்தியாளர்களிடம் கூறுகையில்: அதிமுக என்பது ஒரு குடும்பம் குடும்பத்தில் 5 பெரும் ஒரே மாதிரி இருப்பதில்லை எனவே அனைவரும் ஒருங்கிணைய வேண்டும் எடப்பாடி-க்கு நல்ல புத்தி கொடுக்க வேண்டும் அதிமுக ஒன்றிணைந்து வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளும் வெற்றி பெற வேண்டும் என்பது தொண்டர்களின் விருப்பம் என தெரிவித்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *