திருச்சி சங்கிலியாண்டபுரம் , மணல்வாரித்துறைரோடு அருகில் இளைஞர்களை சீரழிக்கும் கஞ்சா போதை பொருள் விற்பனை செய்ததாக குற்றவாளி ரமேஷ் ( எ ) துப்பாக்கி ரமேஷ் வயது 52 என்பவரை கைது செய்து அவரிடமிருந்து சுமார் 3 கிலோ 100 கிராம் ( மதிப்பு ரூ .31,000 / – ) கஞ்சாவை கைப்பற்றி குற்றவாளி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு , நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது . மேலும் குற்றவாளி மீது கஞ்சா போதை பொருள் விற்பனை செய்ததாக 8 வழக்கும் , பொதுமக்களை கத்தியை காட்டி அச்சுறுத்தி மிரட்டி பணம் பறித்ததாக 7 வழக்கும் , திருட்டு மற்றும் அடிதடி வழக்கு உட்பட மொத்தம் 20 வழக்குகள் பல்வேறு காவல் நிலையங்களில் நிலுவையில் இருப்பது விசாரணையில் தெரிய வந்ததை அடுத்து . மேற்படி குற்றவாளி ரமேஷ் ( எ ) துப்பாக்கி ரமேஷ் தொடர்ந்து குற்றம் செய்யும் எண்ணம் உள்ளவர் எனவும் , தொடர்ந்து இளைஞர்களை சீரழிக்கும் போதை பொருள் விற்பனை செய்பவர் என விசாரணையில் தெரியவந்தது , மேலும் குற்றவாளியின் தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு பாலக்கரை காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்து , திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் கஞ்சா வியாபாரியை குண்டர் தடுப்பு ( மருந்து சரக்கு குற்றவாளி ) சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டார்கள் . அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் இருந்து வரும் குற்றவாளி மீது குண்டர் தடுப்பு ஆணையினை சார்பு செய்து சிறையில் அடைக்கப்பட்டார் . மேலும் , திருச்சி மாநகரில் இதுபோன்ற கஞ்சா விற்பனை செய்யும் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்