திருச்சி அலெக்சாண்ட்ரியா சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் 13 வயது பள்ளி மாணவியான சிவானி கேகே நகர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கடந்த சில மாதங்களாக உடல் பருமனாக இருப்பதற்கு தொடர்ந்து பல்வேறு சிகிச்சை முறைகளை பின்பற்றி வந்துள்ளார். இதில் எந்தவித முன்னேற்றமும் இல்லாததால் தொடர்ந்து மன உளைச்சலில் இருந்த சிவாணி நேற்று மதியம் வீட்டில் சாப்பிட்டுவிட்டு தன்னுடைய அறைக்கு சென்ற அவர் இன்று காலை வரை கதவு திறக்காததால் சந்தேகம் அடைந்த பெற்றோர் அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது சிவானி தூக்கில் தொங்கி உள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த கண்டோன்மென்ட் காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். முதல்கட்ட விசாரணையில் அந்தப் பெண் அபரிவிதமான உடல் வளர்ச்சி பருமன் ஏற்பட்டு தொடர்ந்து பல்வேறு சிகிச்சை முறைகளில் ஒவ்வொரு மாதமும் உடல் எடை குறைப்பது தொடர்பான பட்டியலை எழுதி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் தொடர்ந்து குடும்பத்தாரிடம் விசாரணை நடத்தப்பட்டதில் உடல் பருமனாக இருப்பதால் தொடர்ந்து மனரீதியாக அவர் பாதிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர். இவரது தொலைபேசியில் தொடர்ந்து தற்கொலை செய்வது எப்படி என்ற சம்பந்தமாக வீடியோ பார்த்து வந்ததாக போலீசார் தகவல் தெரிவித்திருக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *