திருச்சி மாநகரில் கடந்த சில தினங்களுக்கு முன் சற்று மனநிலை பாதிக்கப்பட்டு திரிந்த லம்சுமி வயது 65 மூதாட்டியை மீட்டெடுத்த உப்பிலியபுரம் போலீசார், திருச்சி முதியோர் காப்பகம் அன்பாலயத்தில் ஒப்படைத்தனர். சற்று குணமான நிலையில் அவரை விசாரணை செய்து அவரது உறவினர்களிடம் ஒப்படைக்க உத்தரவிட்டதன் பேரில்,

உப்பிலியபுரம் போலீசார் புளியஞ்சோலையை அடுத்துள்ள நெட்டவேலம்பட்டியை சேர்ந்த லட்சுமியின் மகன் பாலமுருகனிடம் ஒப்படைத்தனர்.போலீசார் செய்த சமூக சேவையை பாராட்டி உப்பிலியபுரம் சப்இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு, ஏட்டு தியானேஸ்வரன் ஆகியோரை நேரில் அழைத்து சான்றிதழ்களையும், பாராட்டையும் திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *