திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமாரிடம் திருச்சி துறையூர் பகளவாடி கிராமத்தில் இருந்து வந்த பொதுமக்கள் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது;-

கிராம சபை கூட்டங்கள் முறையாக நடத்த மதுரை உயர் நீதிமன்றம் அளித்த உத்தரவை மதிக்காமலும் அரசின் விதிமுறைகளை பின்பற்றப்படாததாலும் பகளவாடி பஞ்சாயத்து நல்ல வண்ணி பட்டி கிராமத்தில் நேற்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தை ரத்து செய்து உரிய விதிமுறைகளை பின்பற்றி கிராம சபை கூட்டம் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்,

இதேபோல் பரமங்கலம் ஊராட்சி குருவிக்காரன் குளம் கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தை ரத்து செய்து உரிய விதிமுறைகளை பின்பற்றி மீண்டும் கிராம சபை கூட்டத்தை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டி அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமாரிடம் மனு அளித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *