தமிழகத்தில் கோரோனா 2ம் பரவலைத் தடுக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக தற்போது முழு ஊரடங்கு பிறப்பித்துள்ளது .இதன் காரணமாக விவசாயத்திற்குத் தேவையான உரங்கள் விற்பனை செய்யும் கடையும் அடைக்கப்பட்டது.

இதனால் விவசாய விவசாயிகள் தங்கள் நிலத்திற்கு தேவையான உரம் இடுபொருள் விதைகள் வாங்குவதற்கு கடைகள் இல்லாததால் கடைகள் திறக்கப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

இதன் அடிப்படையில் தமிழக முதல்வர் காலை 6 மணி முதல் 10 மணி வரை கடைகள் திறக்கலாம் என உத்தரவிட்டார் இதைத்தொடர்ந்து திருச்சியில் இன்று பல்வேறு பகுதியில் உள்ள உரக் கடைகள் மற்றும் இடுபொருள் விதை கடைகள் திறக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து விவசாயிகள் தங்கள் நிலத்திற்கு தேவையான இடுபொருள் விதை மற்றும் உரங்களை மகிழ்ச்சியுடன் வாங்கிச் செல்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்