உலக வன நாள் விழாவினை முன்னிட்டு வனத்துறையின் சார்பில் திருச்சி மாவட்டம் எம்.ஆர். பாளையத்தில் உள்ள யானைகள் மறுவாழ்வு முகாமில் இன்று மாவட்ட கலெக்டர் சிவராசு, மாவட்ட வன அலுவலர் கிரன் ஆகியோர் மரக்கன்றுகளை நட்டனர்.

அதனைத் தொடர்ந்து இந்த முகாமில் பராமரிக்கப்படும் 8 யானைகளுக்கு உணவு வழங்கி , யானைகளின் பராமரிப்பு மற்றும் செயல்பாடுகள் குறித்து வனத்துறை அலுவலரிடம் மாவட்ட கலெக்டர் சிவராசு கேட்டறிந்தார் . பின்னர் மாணவ , மாணவிகளுடன் கலந்துரையாடிய மாவட்ட கலெக்டர் வனங்களைப் பாதுகாப்பதன் அவசியம் குறித்து எடுத்துரைத்தார்.

இந்நிகழ்வில் உதவி வனப்பாதுகாவலர் சம்பத்குமார் , வனச்சரகர்கள் கோபிநாத் , சரவணக்குமார் , முருகேசன் , வட்டாட்சியர் சக்திவேல் முருகன் மற்றும் நாளந்தா வேளாண்மைக் கல்லூரி , சிறுகனூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ , மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர் . முன்னதாக இம்முகாமின் சாலைப் பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகள் உள்ளிட்ட குப்பைகளை வனத்துறை அலுவலர்களுடன் இணைந்து மாணவ , மாணவிகள் அகற்றினர் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்