தமிழகத்தில் விரைவில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலை ஒட்டி மத்திய மற்றும் வடக்கு மாவட்டத்தில் போட்டியிட விரும்பும் நிர்வாகிகளிடம் இருந்து வேட்புமனுக்களை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சரும், கழக முதன்மைச் செயலருமான கே என் நேரு இன்று காலை திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நேரில் பெற்றுக் கொண்டார்.

 

திருச்சி 52வது வார்டுக்கு போட்டியிடுவதற்காக முன்னாள் கவுன்சிலர் துர்க்காதேவி இன்று விருப்ப மனுவை அளித்தார். நிகழ்ச்சியில் மாநகரச் செயலாளர் அன்பழகன், மாவட்ட துணை செயலாளர் முத்துச்செல்வம், பகுதி செயலாளர் காஜாமலை விஜய் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *