தமிழகத்தில் விரைவில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான விருப்ப மனு பெரும் பணி அதிமுகவில் தொடங்கியுள்ளது. இதற்காக திருச்சி மாநகர் மாவட்டக் கழக அலுவலகத்தில் இன்று முன்னாள் அமைச்சரும் அதிமுக திருச்சி மாநகர் மாவட்ட செயலாளருமான வெல்லமண்டி நடராஜன் தேர்தலில் போட்டியிட விரும்புவோருக்கு விருப்ப மனுக்களை வழங்கி வருகிறார்.

அதன்படி திருச்சி பாலக்கரை சங்கிலியாண்டபுரம் பழைய வார்டு எண் 33, இருந்து தற்போது புதிய வார்டு எண் 49ல் அதிமுக சார்பில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடுவதற்காக அப்பகுதி மக்களின் நன்மதிப்பைப் பெற்ற முன்னாள் கவுன்சிலர் மகாலெட்சுமி மலையப்பன் விருப்ப மனுவை பூர்த்தி செய்து மாவட்டச் செயலாளர் வெல்லமண்டி நடராஜனிடம் இன்று வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாநில MGR இளைஞரணிச் செயலாளர் சீனிவாசன், திருச்சி மண்டல IT பிரிவு துணைச் செயலாளர் ராமச்சந்திரன், கழகத் துணைச் செயலாளர் வனிதா மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *