தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே. எஸ் .அழகிரி அறிவிப்புக்கு இணங்க நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக காங்கிரஸ் பேரியக்கத்தின் சார்பில் போட்டியிட விரும்புகின்ற நகராட்சி பேரூராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு இன்று 1. 12 .2021 புதன்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திருச்சி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகமான திருச்சி அருணாசலம் மன்றத்தில் கட்சியினர் விருப்ப மனுக்களை அளித்தனர்.

அதன் படி திருச்சி தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட மணப்பாறை துவாக்குடி நகராட்சி மற்றும் சிறுகமணி கூத்தைப்பார் பொன்னம்பட்டி பேரூராட்சி வார்டுகளில் போட்டியிட விரும்புவோரிடமிருந்து விருப்ப மனுக்களை மாவட்ட தலைவர் வழக்கறிஞர் கோவிந்தராஜன் பெற்றுக்கொண்டார்.

.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *