அரசு விரைவு போக்குவரத்து கழக ஊழியர் சங்க( சி.ஐ.டி.யு.) திருச்சி கிளை ஆண்டு பேரவை கூட்டம் திருச்சியில் இன்று நடந்தது. சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் ரங்கராஜன், எஸ் .இ .டி.சி . (சிஐடியு) மத்திய சங்க உதவித் தலைவர் நடராஜன், பொதுச்செயலாளர் கனகராஜன், சம்மேளன குழு உறுப்பினர் முத்துவேல் ,

மாநிலத் தலைவர் செந்தில் ,மத்திய சங்க உதவிச் செயலாளர் ஜெயராமன் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு;- போக்குவரத்து கழகங்களின் வரவு செலவு வித்தியாசத் தொகையை அரசு வழங்க வேண்டும்.

போக்குவரத்து கழக பணியாளர்களின் ஊதிய ஒப்பந்தத்தை உடனே பேசி தீர்வு காணவேண்டும். வருகை பதிவு மற்றும் கூடுதல் பணி நேர ஊதிய குறைப்பை கைவிட வேண்டும் .போக்குவரத்து கழக விதிமுறைகளின் படி பணிநியமனம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *