“திரு அவள்” எனும் திருநங்கைகள் குழுவின் சார்பாக கடந்த 15 நாட்களாக ஊரடங்கு காலத்தில் வீடற்று சாலையோரத்தில் தங்கியுள்ள மக்களுக்கு தினமும் 150 பேருக்கு உணவுகளை தானே தயாரித்து சாலையோர மக்களுக்கு விநியோகிக்க கூடிய பணியினை ரியா, மாயா, பர்வீன், உமா, நமீதா ஆகிய ஐந்து திருநங்கைகள் இணைந்து சிறப்பாக செயல்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் திருச்சி மெயின்கார்டு கேட் அருகே உள்ள பகுதியில் ஏழை எளிய மக்களுக்கு உணவு பொட்டலங்கள் வாட்டர் பாட்டில் ஆகியவற்றை இன்று வழங்கினார்.

மேலும் ஊரடங்கு காலத்திற்குப் பிறகு திருச்சி ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு பாதாம் பாலும், ரொட்டியும் வழங்கவுள்ளதாக மகிழ்வுடன் திருநங்கை குழுவினர் தெரிவித்தனர். கொரோனா ஊரடங்கு காலத்தில் பசியால் வாடும் ஏழைகளுக்கு தங்களால் முயன்ற உணவு பொட்டலங்களை தாங்களே தயார் செய்து வழங்கிவரும் இவர்களின் மனித நேய சேவைக்கு பொதுமக்கள் மனதார பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *