தமிழகத்தில் கொரோனா தொற்று 2ம் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கடந்த 10ஆம் தேதி முதல் வரும் 24-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் உணவின்றி தவிக்கும் ஏழைகளுக்கு பல்வேறு கட்சிகள், சமூகநல அமைப்புகள் சார்பில் காலை, மாலை, இரவு என உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக திருச்சி சங்கிலியாண்டபுரம், துரைசாமிபுரம், உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள் ஒன்றுகூடி தங்களால் இயன்ற பொருளாதாரத்தை சேர்த்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு காலை, மாலை, இரவு என நூற்றுக்கு மேற்பட்ட சாலையோர வாசிகளுக்கு உணவு பொட்டலங்களை வழங்கி வருகின்றனர். இளைஞர்கள் மேற்கொண்டுள்ள இந்த சமூக செயலை அப்பகுதி பொது மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *