இன்று புதன்கிழமை காலை 7.30 முதல் 9.00 எமகண்டம் நேரத்தில் திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி அலுவலக திறப்பு விழா பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில், சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் முன்னிலையில் இன்று காலை 8 மணிக்கு எமகண்டம் நேரத்தில்நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே என் நேரு ரிப்பன் வெட்டி அலுவலகத்தை திறந்து வைத்தார்.

தொடர்ந்து அலுவலகத்திற்கு அருகில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மரக்கன்றுகளை நட்டு வைத்தார். இந்நிகழ்வில் பகுதி செயலாளர்கள் மதிவாணன், மண்டிசேகர் பாலமுருகன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *