திருச்சி மரக்கடை காந்தி மார்க்கெட் காவல் நிலையம் அருகே உள்ள மறைந்த தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் திருஉருவ சிலையின் கை பகுதியை மர்ம நபர்கள் உடைத்து சேதப்படுத்தியதாக வந்த தகவலை அடுத்து அதிமுகவினர் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் சம்பவ இடத்திற்கு வந்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் மற்றும் அதிமுக நிர்வாகிகள் மறைந்த தமிழக முதல்வர் எம்ஜிஆரின் சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்கள் மீது உரிய நடவடிக்கை கோரி திருச்சி காந்தி மார்க்கெட் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். எம்ஜிஆரின் கைப்பகுதி உடைப்பு குறித்து போலீசார் அப்பகுதியில் சிசிடி கேமராவை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்