திருச்சி அரியமங்கலம் பகுதியில் வசித்து வருபவர் ரவி கணேஷ் வயது 35 பெயிண்டர் ஆக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நேற்றிரவு ரவி கணேஷ் அரியமங்கலம் காமராஜர் பகுதியில் நடந்து வந்து கொண்டிருந்த பொழுது அதே பகுதியை சேர்ந்த மர்ம நபர்கள் ரவி கணேஷ் வழிமறித்து கத்தியைக் காட்டி மிரட்டி அவரிடம் இருந்த பணம் செல்போனை பறிக்க முயன்றனர். அப்போது ரவி கணேஷ் அவர்களிடம் இருந்து தப்பிக்க முயன்றுள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த மர்ம நபர்கள் அவரின் தலை மற்றும் கழுத்தில் வெட்டிவிட்டு பணம் மற்றும் செல்போனை பறித்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். அந்த வழியாக நடந்து சென்றவர்கள் மயங்கி கிடந்த ரவி கணேசை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்து ரவி கணேஷ் அரியமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் 2 வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *