தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி மாவட்ட அலுவலகத்தை 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் முற்றுகையிட்டு தரையில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களுக்கு அனுமதி மறுக்கபட்டதால் ஆட்சியர் அலுவலக நுழைவாயில் முன்பு அரை நிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்பொழுது ஆட்சியர் அலுவலகத்தில் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தனர்.நிகழ்ச்சி முடிந்த பின்னர் அமைச்சர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர் பின்னர் மேகதாதுவில் அணைகட்ட தமிழக அரசு அனுமதிக்காது என தெரிவித்தனர் மேலும் ஜாதிவாரியாக கணக்கெடுப்பு நடத்தி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது கோரிக்கையை வலியுறுத்தி பொழுது அது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்த பின்னர் அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்
இதனைத்தொடர்ந்து விவசாயிகள், மாவட்ட ஆட்சியர் சிவராசுவிடம் கோரிக்கை மனுவை அளித்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *