ஓய்வுபெற்ற முன்னாள் காவல் துறையினர் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் ஹோட்டலில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாநில தலைவர் வேலுசாமி தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். மாநில பொதுச்செயலாளர் செல்வராஜ் முன்னிலை வகித்தார்.

இந்த கூட்டத்தில் அரசு காவலர் பாதுகாப்பு சட்டத்தை உடனே ஏற்ற வேண்டும்,காவலர் நலவாரியம் ஆரம்பித்து செயல்படாமல் உள்ளது இந்த வாரியத்திற்கு அலுவலகம் அமைக்க வேண்டும் மற்றும் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் ஆட்சியின் போது காவலரின் வாரிசுதாரர்களுக்கு கொடுத்து வந்த 10% இட ஒதுக்கீடு மீண்டும் கொடுக்க வேண்டும் உள்ளிட்ட 27 கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்தில் ஓய்வுபெற்ற முன்னாள் காவலர் துறையினர் மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *