முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 98 ஆவது பிறந்த நாள் விழாவையொட்டி திருச்சி தெற்கு மாவட்டம் கிழக்கு தொகுதி கலைஞர்நகர் பாலக்கரை மலைக்கோட்டை பகுதிகளில் ஏழை எளியவர்களுக்கு உணவு மற்றும் கொரோனாவல் வாழ்வாதாரம் இழந்த மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கும் விழா கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் ஏற்பாட்டில் நடைபெற்றது.

இதில் தெற்கு மாவட்டகழக பொறுப்பாளரும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டு பயனாளிகளுக்கு உணவுப் பொருட்களையும் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் மக்களுக்கு நிவாரணப் பொருட்களையும் வழங்கினார். இந்நிகழ்வில் பகுதி கழக செயலாளர்கள் மதிவாணன், ராஜசேகர், பாலமுருகன், அரங்கநாதன், செந்தில், மற்றும் பகுதி கழக நிர்வாகிகள் அணிகளின் அமைப்பாளர்கள் பொதுமக்கள் என பெரும் திரளாக கலந்துகொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *