மருத்துவப் படிப்புகள் தவிர, அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் இன்று முதல் வருகின்ற ஜனவரி 20 ஆம் தேதி வரை விடுமுறை என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமிக்ரான் பரவல் அதிகரிப்பு காரணமாக இன்று முதல் இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கும், வருகிற ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும்,சில கட்டுப்பாடுகளையும் அரசு அறிவித்துள்ளது.

 அதன்படி,மருத்துவம் தவிர,அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் இன்று முதல் ஜனவரி 20-ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *