திருச்சி காந்தி மார்க்கெட்டில் இருந்து தஞ்சாவூர் செல்லும் பிரதான சாலையில் உள்ள பழமையான வேப்பமரம் நேற்று பெய்த மழையில் நிலைகுலைந்து இருந்து வந்த நிலையில் இன்று இரவு திடீரென வேரோடு சாய்ந்து சாலையில் விழுந்தது. இந்நிலையில் சாலையில் வாகனங்கள் ஏதும் செல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

மேலும் சாலையை மறைத்தபடி வேப்ப மரம் வேரோடு விழுந்ததால் அவ்வழியாக வாகனங்கள் செல்லாமல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு வேறு வழியில் வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் சாலையில் விழுந்த மரக்கிளைகளை அப்புறப்படுத்தும் பணியில் ஜேசிபி இயந்திரம் கொண்டு மாநகராட்சி ஊழியர்கள் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *