தமிழகத்தில் அமுல்படுத்தப்பட்ட கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 2 மாதங்களாக திருச்சி மையப் பகுதியில் செயல்பட்டுவரும் பழமையான காந்தி மார்க்கெட் மூடப்பட்டுள்ளது. அந்த மார்க்கெட்டில் செயல்பட்டு வந்த மொத்த காய்கறி வியாபாரம் மற்றும் சில்லறை வியாபாரம் நிறுத்தப்பட்டுள்ளது. காந்தி மார்க்கெட் வியாபாரிகள் மார்க்கெட் வெளியே மேலப்புலிவார் ரோடு, பாலக்கரை ரோடு பகுதியில் மொத்தம் மற்றும் சில்லறை வியாபாரத்தை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கொரோனா கட்டுக்குள் வந்த நிலையில் தளர்வுகள் வழங்கப்பட்டது. மேலும் வியாபாரிகள் மாவட்ட ஆட்சியரிடம் காந்தி மார்க்கெட்டில் கடைகளை திறக்க மனு அளித்தனர். அதனையொட்டி நாளை ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரையில் காந்தி மார்க்கெட்டுக்குள் மொத்த வியாபாரத்தை நடத்திக் கொள்ளவும் மறுநாள் காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை சில்லறை வியாபாரத்தை நடத்திக் கொள்ளவும் அதே நேரம் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளாத வியாபாரிகள் அனைவரும் விரைந்து தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு அறிவுறுத்தி உள்ளார். அதனையொட்டி மாநகராட்சி பணியாளர்கள் இன்று காலை காந்தி மார்க்கெட் உள்ளே தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்டனர்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்