அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனையை தடுக்க திருச்சி மாநகர காவல்துறை சார்பில் தனிப்படை அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வரப்பட்டது. இந்நிலையில் இன்று 04.08.2021-ந்தேதி காந்தி மார்க்கெட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சௌராஷ்டிரா தெருவில் உள்ள குடோனில் விற்பனைக்காக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பதுக்கிவைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தனிப்படை மற்றும் காந்தி மார்க்கெட் காவல் நிலைய காவலர்கள் அடங்கிய குழுவினர் சோதனை செய்தனர்.

சோதனையில் அங்கு பதுக்கிவைக்கப்பட்டிருந்த ரூபாய் ஒரு இலட்சம் (ரூ.1,00,000/-) மதிப்புள்ள 8 மூட்டைகளில் இருந்த 26 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா (Vimal,V1, Swagat Gold) பொருட்களை பறிமுதல் செய்தும், திருச்சி பெரிய கடைவீதியை சேர்ந்த குடோன் உரிமையாளர் ஹரீஷ் குமார் என்பவரை கைது செய்து காந்தி மார்க்கெட் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்