திருச்சி மாநகர பகுதிகளில் கொரோனா பரவல் தடுக்கும் வகையில் சுகாதார பணிகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக சாக்கடைகள் மற்றும் சாக்கடை செல்லும் கால்வாய்களை தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் மேலசிந்தாமணி பகுதியில் உள்ள சாக்கடைகள் தூர்வாரும் பணிகளை ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் பணிகள் குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் பணிகள் குறித்தும் கேட்டறிந்தார்.மேலும் மழைக்காலத்துக்கு முன்பாக அனைத்து பகுதிகளையும் தூர் வாரவும் மழைக்காலத்தில் பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களை கணக்கில் கொண்டு விரைந்து பணிகளை முடிக்கவும் அதிகாரிகளிடம் வலியுறுத்தினர். இந்நிகழ்வில் பாலக்கரை மலைக்கோட்டை பகுதி செயலாளர் மதிவாணன், பாலக்கரை பகுதி செயலாளர் மண்டிசேகர் உட்பட பலர் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *